பல வெற்றி திரைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ரெஜிஷ் மிதிலா, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.
தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் லிஜோ ஜேம்ஸுன் இணைந்து இப்படத்தை தயரிக்கும் ரெஜிஷ் மிதிலா, படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார்.
முழுக்க முழுக்க பேண்டஸி வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, மருது பட்டி(குளப்புள்ளி லீலா), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார். சைலோ படத்தொகுப்பு செய்கிறார்.

இன்னும் தகைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையோடு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...