பல வெற்றி திரைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ரெஜிஷ் மிதிலா, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.
தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் லிஜோ ஜேம்ஸுன் இணைந்து இப்படத்தை தயரிக்கும் ரெஜிஷ் மிதிலா, படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார்.
முழுக்க முழுக்க பேண்டஸி வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, மருது பட்டி(குளப்புள்ளி லீலா), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார். சைலோ படத்தொகுப்பு செய்கிறார்.
இன்னும் தகைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையோடு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...