தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பூமிகா சாவ்லா, குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
கடைசியாக நயன் தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார். கதையை முன்னோக்கி நகர்த்தி செல்லும் மிக முக்கியமான மையக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா, இனி தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு அலுப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். இனி தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான வேடங்களில் பல தமிழ்ப் படங்களில் நடிப்பேன், என்று கூறியவர் எதிர்மறை வேடங்களில் நடிக்க தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
கோபிசந்தின் ’சீட்டிமார்’ மற்றும் விஸாக் சென்னின் ’பாகல்’ ஆகிய இரண்டு மெகா ஹிட் தெலுங்குப் படங்களில் நடித்திருந்த பூமிகா சாவ்லா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...