தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பூமிகா சாவ்லா, குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
கடைசியாக நயன் தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார். கதையை முன்னோக்கி நகர்த்தி செல்லும் மிக முக்கியமான மையக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா, இனி தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு அலுப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். இனி தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான வேடங்களில் பல தமிழ்ப் படங்களில் நடிப்பேன், என்று கூறியவர் எதிர்மறை வேடங்களில் நடிக்க தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
கோபிசந்தின் ’சீட்டிமார்’ மற்றும் விஸாக் சென்னின் ’பாகல்’ ஆகிய இரண்டு மெகா ஹிட் தெலுங்குப் படங்களில் நடித்திருந்த பூமிகா சாவ்லா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...