இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பதிவு செய்வதோடு, தான் தயாரிக்கும் படங்கள் மூலமாக திரையுலகில் மட்டும் இன்றி சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவருடைய நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படமும் தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் காவல் நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பதை காண முடிந்தது.
”போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு...”, “காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை...” உள்ளிட்ட பல
வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக ’ரைட்டர்’ இருக்கும் என்று தோன்றுகிறது.
அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியிருக்கும் இப்படத்தில், ரைட்டர் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...