பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்குகிறார். இவர் நாளை இயக்குநர் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர். இவரது சக போட்டியாளர்கள் தான் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் என்பது குறிப்பிடத்தக்கது.
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்ஷன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூறுகையில், “சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.” என்றார்.
இப்பட்த்தின் தலைப்பு மற்றும் பஸ் லுக் போஸ்டரை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.சிவநேசன் கூறினார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...