பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்குகிறார். இவர் நாளை இயக்குநர் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர். இவரது சக போட்டியாளர்கள் தான் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் என்பது குறிப்பிடத்தக்கது.
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்ஷன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூறுகையில், “சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.” என்றார்.
இப்பட்த்தின் தலைப்பு மற்றும் பஸ் லுக் போஸ்டரை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.சிவநேசன் கூறினார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...