ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘கலியுகம்’. பிரைம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா, ஆர்.கே.இண்டர்நேஷ்னல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் இப்படத்தை ப்ரமோத் சுந்த இயக்குகிறார்.
‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஷரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கிஷோர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது.
இதற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் கலைநயம் மிக்க அதிநவீன அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.
கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.

போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் உருவாகி வரும் ‘கலியுகம்’ திரைப்படம் திறமைக்க கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி வருவதோடு, படப்பிடிப்பில் இருக்கும் போதே எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...