Latest News :

நடிகை அஞ்சலி உடனான உறவு! - மனம் திறந்த நடிகர் பிளாக் பாண்டி
Wednesday December-29 2021

தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகி பிறகு வெள்ளித்திரை நடிகரானவர்களில் பிளாக் பாண்டியும் ஒருவர். பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் பிளாக் பாண்டி, தனக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய நண்பர்கள் பலர் தற்போது சினிமாவில் பெரிய இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அஞ்சலி போன்றவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பிளாக் பாண்டியுடன் நட்பு பாராட்டியவர்களாம். நடிகை அஞ்சலியை “வாடி...போடி...” என்று பேசும் பிளாக் பாண்டி சிவகார்த்திகேயனையும் “வாடா...போடா...” என்று பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவராம்.

 

தற்போது சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம். இதற்கான காரணத்தை பிளாக் பாண்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். அதாவது, பிளாக் பாண்டி கஷ்ட்டப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயன் தனது மேலாளர் மூலம், அவருக்கு பணம் கொடுத்துவிட்டாராம். ஆனால், அதை வாங்க மறுத்த பாண்டி, சிவாவின் படத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள், என்று கூறினாராம். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம்.

 

அதேபோல், நடிகை அஞ்சலி ‘அங்காடி தெரு’ படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பிளாக் பாண்டிக்கு தெரியுமாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததோடு, ஒன்றாக நடன பயிற்சியில் ஈடுபட்டார்களாம்.

 

அஞ்சலி முன்னணி நடிகையாக வளர்ந்த போது, அவருக்கு போன் செய்தால், அதை அவருடைய மேனேஜர் தான் எடுத்து பேசுவாராம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, ஒரு முறை அஞ்சலியை நேரில் பார்த்து திட்டிவிட்டாராம். அதன் பிறகு அவரிடம் சாரி கேட்ட அஞ்சலி, அவருடைய பர்ஷனல் தொலைபேசி எண்ணை கொடுத்தாராம். ஆனால், அந்த எண்ணில் அவரை தொடர்பு கொண்ட போதும் அஞ்சலி போனை எடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, மீண்டும் அஞ்சலியின் நேரடி தரிசனத்திற்காக காத்துக்கொண்டிக்கிறாராம்.

 

இப்படி அடையாளம் தெரியாத காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது உச்சத்திற்கு சென்ற போது, முன்பு இருந்தது போல் இருக்கவில்லை. உயரத்திற்கு சென்றுவிட்டால் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டுமோ என்னவோ, என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்போதும் ஒரே மாதியாக நான் நானாகவே இருக்கிறேன், என்று வருத்தத்தோடு பிளாக் பாண்டி கூறியிருக்கிறார்.

Related News

7967

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery