Latest News :

நடிகை அஞ்சலி உடனான உறவு! - மனம் திறந்த நடிகர் பிளாக் பாண்டி
Wednesday December-29 2021

தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகி பிறகு வெள்ளித்திரை நடிகரானவர்களில் பிளாக் பாண்டியும் ஒருவர். பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் பிளாக் பாண்டி, தனக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய நண்பர்கள் பலர் தற்போது சினிமாவில் பெரிய இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அஞ்சலி போன்றவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பிளாக் பாண்டியுடன் நட்பு பாராட்டியவர்களாம். நடிகை அஞ்சலியை “வாடி...போடி...” என்று பேசும் பிளாக் பாண்டி சிவகார்த்திகேயனையும் “வாடா...போடா...” என்று பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவராம்.

 

தற்போது சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம். இதற்கான காரணத்தை பிளாக் பாண்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். அதாவது, பிளாக் பாண்டி கஷ்ட்டப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயன் தனது மேலாளர் மூலம், அவருக்கு பணம் கொடுத்துவிட்டாராம். ஆனால், அதை வாங்க மறுத்த பாண்டி, சிவாவின் படத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள், என்று கூறினாராம். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம்.

 

அதேபோல், நடிகை அஞ்சலி ‘அங்காடி தெரு’ படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பிளாக் பாண்டிக்கு தெரியுமாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததோடு, ஒன்றாக நடன பயிற்சியில் ஈடுபட்டார்களாம்.

 

அஞ்சலி முன்னணி நடிகையாக வளர்ந்த போது, அவருக்கு போன் செய்தால், அதை அவருடைய மேனேஜர் தான் எடுத்து பேசுவாராம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, ஒரு முறை அஞ்சலியை நேரில் பார்த்து திட்டிவிட்டாராம். அதன் பிறகு அவரிடம் சாரி கேட்ட அஞ்சலி, அவருடைய பர்ஷனல் தொலைபேசி எண்ணை கொடுத்தாராம். ஆனால், அந்த எண்ணில் அவரை தொடர்பு கொண்ட போதும் அஞ்சலி போனை எடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, மீண்டும் அஞ்சலியின் நேரடி தரிசனத்திற்காக காத்துக்கொண்டிக்கிறாராம்.

 

இப்படி அடையாளம் தெரியாத காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது உச்சத்திற்கு சென்ற போது, முன்பு இருந்தது போல் இருக்கவில்லை. உயரத்திற்கு சென்றுவிட்டால் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டுமோ என்னவோ, என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்போதும் ஒரே மாதியாக நான் நானாகவே இருக்கிறேன், என்று வருத்தத்தோடு பிளாக் பாண்டி கூறியிருக்கிறார்.

Related News

7967

’ஜுராசிக் வேர்ல்டு : ரீபர்த்’ பற்றி மனம் திறந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்!
Wednesday June-18 2025

உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...

’மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பலர் என்னை கட்டிப்பிடித்த அழுதார்கள்! - நடிகர் காளி வெங்கட் நெகிழ்ச்சி
Wednesday June-18 2025

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...

ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!
Monday June-16 2025

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...

Recent Gallery