தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா, திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, வில்லி உள்ளிட்ட எதிர்மறையான வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 2022 ஆம் வருடத்தில் எனது வீட்டுக்குள் வந்த முதல் பார்வையாளர் கொரோனா தான். அது எனது குடும்பத்தார் அனைவரையும் பாதித்துள்ளது. இருப்பினும் நாங்கள் அதை எங்க வீட்டில் இருக்க விட மாட்டோம். எனவே நீங்களும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள், என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மூன்றாவது அலை உருவாகியிருப்பதோடு, சினிமா பிரபலங்கள் பலர் இந்த மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டு வருவது சினிமாத்துறையினரிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...