தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா, திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, வில்லி உள்ளிட்ட எதிர்மறையான வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 2022 ஆம் வருடத்தில் எனது வீட்டுக்குள் வந்த முதல் பார்வையாளர் கொரோனா தான். அது எனது குடும்பத்தார் அனைவரையும் பாதித்துள்ளது. இருப்பினும் நாங்கள் அதை எங்க வீட்டில் இருக்க விட மாட்டோம். எனவே நீங்களும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள், என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மூன்றாவது அலை உருவாகியிருப்பதோடு, சினிமா பிரபலங்கள் பலர் இந்த மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டு வருவது சினிமாத்துறையினரிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...