19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது.
கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் மொத்த மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மற்ற இரண்டு திரைப்படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய ‘சேத்துமான்’ படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கிய ‘தேன்’ படத்திற்கும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், “’சேத்துமான்’ திரைப்படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை ’சேத்துமான்’ படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரும் மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.” என்றார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...