Latest News :

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற பா.இரஞ்சித் படம்
Thursday January-06 2022

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது.

 

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 

இதில் மொத்த மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மற்ற இரண்டு திரைப்படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. 

 

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய ‘சேத்துமான்’ படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கிய ‘தேன்’ படத்திற்கும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

 

Sethuman

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், “’சேத்துமான்’ திரைப்படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை ’சேத்துமான்’ படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரும் மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.” என்றார்.

Related News

7977

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery