Latest News :

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற பா.இரஞ்சித் படம்
Thursday January-06 2022

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது.

 

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 

இதில் மொத்த மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மற்ற இரண்டு திரைப்படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. 

 

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய ‘சேத்துமான்’ படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கிய ‘தேன்’ படத்திற்கும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

 

Sethuman

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், “’சேத்துமான்’ திரைப்படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை ’சேத்துமான்’ படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரும் மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.” என்றார்.

Related News

7977

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery