Latest News :

‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Saturday January-08 2022

சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தொண்டர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லும் இன்று வெளியாகியுள்ளது.

 

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கும் இப்படத்தை கே.கே.ஆர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே.கே.ரமேஷ் தயாரிக்கிறார்.

 

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். 

 

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டனர்.

 

படம் குறித்து கூறிய இயக்குநர் ரா.பரமன், “தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன் முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' உருவாகி இருக்கிறது.'' என்றார்.

 

Samuthirakkani in Public

Related News

7982

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...