Latest News :

மக்கள் நலனுக்காக நடிகர் கார்த்தி எடுக்கும் புது முயற்சி!
Sunday January-09 2022

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறார். 

 

தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 

இந்தக் கையெழுத்து இயக்கத்தில் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இது குறித்து கார்த்தி பகிர்ந்துள்ள செய்தியில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

 

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்த போதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை. 

 

பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt பிரிஞ்சால், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை. 

 

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இது குறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.  எனவே மக்கள் நலனைக் காக்க, இது குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகர் கார்த்தியின் இந்த பதிவுக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்து வருவதோடு, பலர் கையெழுத்திட்டும் வருகிறார்கள்.

 

நீங்களும் இதில் கையெழுத்திட வேண்டுமெனில் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் - https://www.change.org/p/i-urge-fssaiindia-please-act-now-to-stop-gm-foods-from-entering-indian-kitchens-officeof-mm-gmfreefood

Related News

7983

’காந்தாரா’, ’ஹனுமன்’ படங்கள் வரிசையில் ‘ரூபன்’ இடம் பிடிக்கும் - இயக்குநர் ஐயப்பன் நம்பிக்கை
Thursday April-18 2024

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...

அம்பானி வீட்டு திருமணத்திற்கு நிகராக நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
Thursday April-18 2024

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...

ஓடிடி தளத்திலும் சக்கைப்போடு போடும் ‘பிரேமலு’
Thursday April-18 2024

இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...