இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஒன் 2 ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரிஷா நடிப்பில் வெளியான ‘பரமபத விளையாட்டு’ படத்தை இயக்கிய கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இதில் சுந்தர்.சி-க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர்களுடன் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, வில்லன் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஆர்.ஜெனார்த்தனன் கலை இயக்குநராக பணியாற்ற ரக்கர் ராம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...