நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா, திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவரும் பிரபல நடிகருமான தனுஷ், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இளைய மகள் திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது மூத்த மகளின் 18 வருட திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருப்பது ரஜினிகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணத்தில் பல வெற்றிகளை கண்ட ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருவது அவரது ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...