நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா, திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவரும் பிரபல நடிகருமான தனுஷ், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இளைய மகள் திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது மூத்த மகளின் 18 வருட திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருப்பது ரஜினிகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணத்தில் பல வெற்றிகளை கண்ட ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருவது அவரது ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...