நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா, திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவரும் பிரபல நடிகருமான தனுஷ், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இளைய மகள் திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது மூத்த மகளின் 18 வருட திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருப்பது ரஜினிகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணத்தில் பல வெற்றிகளை கண்ட ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருவது அவரது ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது...
’மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளு குளு’ ஆகிய படங்களை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் 4 வது படத்திற்கு ‘29’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...