நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா, திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவரும் பிரபல நடிகருமான தனுஷ், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இளைய மகள் திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது மூத்த மகளின் 18 வருட திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருப்பது ரஜினிகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணத்தில் பல வெற்றிகளை கண்ட ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருவது அவரது ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...