Latest News :

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது! - சூர்யா, ஜோதிகா, உதயநிதி தேர்வு
Thursday January-20 2022

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் சூர்யா, ஜோதிகா தயாரித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வரும் நிலையில், உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

 

சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

 

’ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

 

மேலும், ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சூர்யா, உதயநிதி ஸ்டாலின், நடிகை ஜோதிகா ஆகியோர் நேரில் கலந்துக்கொண்டு விருது பெற்றுக்கொள்ளுமாறு விருது குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related News

8001

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery