Latest News :

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது! - சூர்யா, ஜோதிகா, உதயநிதி தேர்வு
Thursday January-20 2022

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் சூர்யா, ஜோதிகா தயாரித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வரும் நிலையில், உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

 

சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

 

’ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

 

மேலும், ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சூர்யா, உதயநிதி ஸ்டாலின், நடிகை ஜோதிகா ஆகியோர் நேரில் கலந்துக்கொண்டு விருது பெற்றுக்கொள்ளுமாறு விருது குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related News

8001

சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்! - அனல் அரசு பணியாற்றிய ‘ஜவான்’ தேர்வு!
Friday April-19 2024

இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்...

’மிராய்’ மூலம் மீண்டும் மிரட்ட வரும் தேஜா சஜ்ஜா!
Friday April-19 2024

‘ஹனுமன்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா...

‘உப்பு புளி காரம்’ இணையத்தொடரின் முதல் பார்வை வெளியீடு
Friday April-19 2024

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது...