‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ ஆகிய படங்களை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தியின் அடுத்தப் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் தான் கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சதீஷ் செல்வகுமார் கார்த்தியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு பிடித்துவிட்டதாம். முழு திரைக்கதையையும் எழுதுமாறு சதீஷிடம் கார்த்தி கூறியிருக்கிறாராம்.
இதையடுத்து, சதீஷ் செல்வகுமாருக்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டதாம். தற்போது முழு திரைக்கதை உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ள சதீஷ் செல்வகுமார், தான் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் என்பது உறுதியாகியுள்ளது.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்களாம்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...