‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ ஆகிய படங்களை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தியின் அடுத்தப் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் தான் கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சதீஷ் செல்வகுமார் கார்த்தியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு பிடித்துவிட்டதாம். முழு திரைக்கதையையும் எழுதுமாறு சதீஷிடம் கார்த்தி கூறியிருக்கிறாராம்.
இதையடுத்து, சதீஷ் செல்வகுமாருக்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டதாம். தற்போது முழு திரைக்கதை உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ள சதீஷ் செல்வகுமார், தான் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் என்பது உறுதியாகியுள்ளது.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்களாம்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...