‘மாநாடு’ வெற்றியின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்டிய சிம்பு, தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்துதல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், பல முன்னணி தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டுவதோடு, பல முன்னணி இயக்குநர்களும் சிம்புவை வைத்து பட இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று சிம்புவை அனுகி, தங்கள் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, ரூ.100 கோடி சம்பளம் தருவதாகவும், முன் பணமாக ரூ.50 கோடியை உடனடியாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாம்.
ஆனால், அந்த 100 கோடி ரூபாயை நிராகரித்த சிம்பு, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், என்பது தான் என் நோக்கம், பணத்திற்காக படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன், என்று கூறிவிட்டாராம். ஆனால், அந்த நிறுவனத்தின் சார்பில் சிம்புவிடம் பேரம் பேசுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள, சிம்பு திட்டவட்டமாக முடியாது, என்று கூறிவிட்டாராம்.
சிம்புவின் இந்த செயலால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே வியப்படைந்துள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்...
’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என வித்தியாசமான கதைத்தேர்வு மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் வசந்த் ரவியிடம் பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் கேட்கும் ஒரு கேள்வி, “நீங்க எப்போது ஜாலியான படத்தில் நடிப்பீங்க? என்பது தான்...
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படமான ‘ஹனுமன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவை சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்...