‘மாநாடு’ வெற்றியின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்டிய சிம்பு, தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்துதல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், பல முன்னணி தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டுவதோடு, பல முன்னணி இயக்குநர்களும் சிம்புவை வைத்து பட இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று சிம்புவை அனுகி, தங்கள் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, ரூ.100 கோடி சம்பளம் தருவதாகவும், முன் பணமாக ரூ.50 கோடியை உடனடியாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாம்.
ஆனால், அந்த 100 கோடி ரூபாயை நிராகரித்த சிம்பு, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், என்பது தான் என் நோக்கம், பணத்திற்காக படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன், என்று கூறிவிட்டாராம். ஆனால், அந்த நிறுவனத்தின் சார்பில் சிம்புவிடம் பேரம் பேசுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள, சிம்பு திட்டவட்டமாக முடியாது, என்று கூறிவிட்டாராம்.
சிம்புவின் இந்த செயலால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே வியப்படைந்துள்ளது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...