கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்களின் மூளைகளில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸாக்த்தான் இருக்கும். டிவி பார்க்காத பழக்கம் உடையவர்களையும் டிவி பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஆரவ் என்பவர் வெற்றி பெற்று, பிக் பாஸ் சீசன் 1 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
சினேகன், ஹாரிஸ், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் என நான்கு பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும், இவர்களில் சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள், என்று மக்களும் பிற ஊடகங்களும் கணித்ததால் என்னவோ, விஜய் டிவி சம்மந்தமே இல்லாத ஆரவுக்கு பட்டத்தை கொடுத்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
கேலி கூத்தாக நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை யாருக்கு கொடுத்தால் நமக்கென்ன. சரி இந்த ஆரவ் யார்? என்பதை சற்று விசாரிக்கையில், அடுத்தவன் மனைவி மீது காதல் கொண்டவர் தான் இந்த ஆரவ், என்ற பகீர் தகவல் நமக்கு கிடைத்தது.
ஆனால், இது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில். ஆம், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘சைத்தான்’ படத்தில், வாத்தியார் வேடத்தில் நடித்த விஜய் ஆண்டனியின் இளம் மனைவியை காதலித்து, அவரிடம் இருந்து அபகரிக்கும் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருந்தாரே அவர் தான் இந்த ஆரவ்.
நாகர்கோவில் தான் ஆரவுக்கு சொந்த ஊர். ஆனால், இவர்கள் குடும்பம் பல ஆண்டுகளாக திருச்சியில் தான் வசித்து வந்துள்ளது.
ஆரவ் பள்ளி படிப்பை எல்லாம் திருச்சியில் தான் முடித்துள்ளார், கல்லூரிக்காக சென்னை வந்த இவர், அப்படியே மாடலிங் துறைக்கு வந்துள்ளார். அங்கிருந்து சைத்தான் பட வாய்ப்பு கிடைக்க, அப்படியே பிக்பாஸ் பக்கமும் எட்டிப்பார்த்துள்ளார்.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் காதலை கைப்பற்றியதன் மூலம் மக்களிடம் பிரபலமாகியுள்ள ஆரவ், அந்த பிரபலத்தை வைத்து பல சினிமா படங்களின் வாய்ப்பை பெற்றுள்ளாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...