’காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி விவசாயி’. நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது. தற்போது ஓரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு வருவதால் பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ‘கடைசி விவசாயி’ படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...