Latest News :

சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Friday February-11 2022

‘டான்’ மற்றும் ‘அயலன்’ படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படமான இப்படத்தை ‘ஜதி ரத்னதாலு’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்குகிறார்.

 

சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, நாராயந்தாஸ் நரங் மற்றும் புச்கூர் ராம் மோகன் ராவ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பிலும், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

 

தற்காலிகமாக ‘எஸ்.கே20’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இதில் சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8032

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery