பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
’அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான லலிதானந்த், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே...” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து ‘ரெளத்திரம்’, ‘மாநகரம்’, ‘காஸ்மோரா’, ‘ஜூங்கா’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள லலிதானந்த், ‘ஒரு எலுமிச்சையின் வரலாறு’ மற்றும் ‘லெமூரியாவில் இருந்த காதலி வீடு’ ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்த், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...