பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
’அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான லலிதானந்த், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே...” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து ‘ரெளத்திரம்’, ‘மாநகரம்’, ‘காஸ்மோரா’, ‘ஜூங்கா’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள லலிதானந்த், ‘ஒரு எலுமிச்சையின் வரலாறு’ மற்றும் ‘லெமூரியாவில் இருந்த காதலி வீடு’ ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்த், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...