திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நிதியாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் என்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனின் இல்ல திருமண விழா பிப்ரவரி 21 ஆம் தேதி காலை சென்னை திருவான்மியூரில் உள்ள பிரமாண்டமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துக்கொன் டு மணமக்கள் சுஷ்மிதா MBA - ஆர்.சரண் MBA ஆகியோரை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, நாசர், மனோபாலா, மயில்சாமி, வைபவ், சுப்பு பஞ்சு, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சரண், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, போனி கபூர், எல்ரெட்குமார், சிவா, ரோகிணி தியேட்டர் பன்னிர் செல்வம் உள்ளிட்ட திரையுலத்தை சேர்ந்த பலர் நேரில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், டிடிவி தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் நேரில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...