காமெடி நடிகரான சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சூரி நாயகனாக நடிக்க தொடங்கியிருப்பதால் அவரை பல இயக்குநர்கள் நாயகனாக நடிக்க அனுகியிருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் நன்றி வணக்கும் கூறி திருப்பி அனுப்பிய சூரி, யாரிடமும் கதை கேட்கவில்லையாம்.
மேலும், வரும் கதைகளை எல்லாம் கேட்டு, அதில் எந்த கதையை தேர்வு செய்வது என்று குழம்பி, பிறகு மொக்கை படங்களில் ஹீரோவாக நடித்து விட கூடாது, என்பதில் கவனமாக இருக்கும் சூரி, அப்படியே திடீர் முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம். அவரது இந்த திடீர் முடிவால் பல அறிமுக இயக்குநர்க அப்செட்டாகியிருக்கிறார்களாம்.
அதாவது, ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் சூரி, முன்னணி இயக்குநர்கள் படங்களில் மட்டுமே ஹீரோவாக நடிக்க வேண்டும், என்று முடிவு செய்திருக்கிறாராம். வெற்றிமாறன் படம் முடிந்த உடன், அவரைப் போன்று மக்களிடம் பிரபலமாக இருக்கும் மற்றும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் படத்தில் தான் அடுத்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சூரி முடிவு செய்துவிட்டாராம்.
அவரது எண்ணம் போல தற்போது முன்னணி இயக்குநரின் இயக்கத்தில் இரண்டாவதாக ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். ஆம், இயக்குநர் அமீர் இயக்கும் படத்தில் சூரி நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.
வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய கதை இயக்கும் அமீர், அப்படத்திற்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த படம் முடிந்த பிறகு மற்றொரு படத்தை இயக்க இருக்கிறாராம். இதில் தான் சூரி நாயகனாக நடிக்கிறாராம்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...