Latest News :

’பொன்னியின் செல்வன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Monday March-14 2022

கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் பல ஜாம்பவாங்கள் ஈடுபட்டு தோல்வியடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அந்த சவாலில் வெற்றி பெற்றுள்ளது.

 

ஆம், மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

 

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைடவடைந்ததாக படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மேலும், கிராபிக்ஸ் பணிகள் தற்போது தொடங்கியிருப்பதால், இன்னும் சில மாதங்களில் முதல் பாகம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.

 

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (மார்ச் 02) ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெளியீட்டு தேதி மற்றும் கதாப்பாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

Ponniyin Selvan

 

அதன்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Ponniyin Selvan

 

மேலும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா  ராய், திரிஷா ஆகியோரது கதாப்பாத்திர உருவம் கொண்ட புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Related News

8072

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery