’வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் படம் ‘ரேக்ளா’. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படம் பிரபுதேவாவின் 58 வது திரைப்படமாக உருவாகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கதிரேசன், சி.வி.குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி, கோபி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...