Latest News :

’பேட்டரி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் குரலில் பதிவான பாட்டு
Friday March-18 2022

செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகும் படம் ‘பேட்டரி’. மணிபாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் கதை மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலை நாயகனிடம் தெரிவிக்க, அவரோ கொலை வழக்கு ஒன்றின் தீவிரத்தால், காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். இதனால் மனம் உடைந்த அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

 

Senguttuvan in Battery

 

கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வரிகளில், ““நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே....என்னில் ஏதோ ஆனது நீதானே...காதலே நீதானே...பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா...“ என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையில், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்கள். கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின்  நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.

 

தற்போது முடியும் தருவாயில் உள்ள ‘பேட்டரி’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Battery

Related News

8098

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery