தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், நாசர் தலைமையில் ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக பாக்யராஜ் அணி தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தேர்தல் செல்லாது என்று அறிவித்ததோடு, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதனால், வாக்கு பெட்டிகள் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாசர் தலைமையிலான அணியின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகளை விரைவில் எண்ண வேண்டும், என்றும் உத்தரவிட்டது. மார்ச் 20 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே நாசர் தலைமையில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் முன்னிலையில் இருந்தனர்.
திடீரென்று பாக்யராஜ் தலைமையிலான அணியினர், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக நாசர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் மீண்டும் பொறுப்பேற்க உள்ளனர்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...