நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடக்கவில்லை என்றாலும், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்ததால், அந்நிகழ்வு குறித்து தமிழகமே பேசி வருகிறது.
தனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது, ஆனால் ரஜினிகாந்துக்கு தெரியும், இருப்பினும் அதை எனக்கு அவர் சொல்லிக்கொடுக்க மாட்டார், அவருடன் வந்தால் தான் சொல்லிக்கொடுப்பார், என்று அவர் கூறுகிறார், என்று ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்த்தின் புதிய அரசியல் கட்சி குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசியல் குறித்து கமலிடம் கேட்டிருந்தால், அதை அவர் எனக்கு சொல்லியிருப்பார், ஆனால் இப்போது எனக்கு அரசியல் குறித்து சொல்லிக்கொடுக்கும் மனநிலையில் அவர் இல்லை, என்று ரஜினி இன்றைய சிவாஜி மணிமண்டபம் நிகழ்வில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய ரசியல் கட்சியின் பெயரை ‘ரஜினிகாந்த் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே பெயரில் தொடங்கப்பட்ட இணையதளத்தில் பலர் தங்களது விபரங்களை பதிவு செய்து வருவதாகவும், அந்த இணையத்தில் கேட்கப்படும் விபரங்களை சரியாக கொடுத்த பிறகு, ரஜினிகாந்த் உங்களை விரைவில் நேரில் சந்திபபர் என்ற தகவல் வருவதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...