பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், அப்போட்டியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் நடிகைகளுக்கு விளம்பரம், சினிமா என்று பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில், ஓவியா தான் டாப்.
போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டாலும், ஆரவை காதலித்து கடுப்பான ஓவியா, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினாலும், அவருக்கு ரூ.5 கோடி கிடைத்திருக்கிறதாம். ஆனால், இதை கொடுத்தது விஜய் டிவி அல்ல, பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ்.
சரவணா ஸ்டோர் புதிய கிளையை திறக்கப் போகிறார்கள், என்று கூவி கூவி விளம்பரப் படுத்திய ஓவியா, அந்நிறுவனத்தின் மேலும் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ’காஞ்சனா 3’, ‘காட்டேரி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள ஓவியா, கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க உடனே ஓகே சொல்கிறார்களாம். அதே சமயம், தான் கேட்கும் சம்பள தொகையில் ஒரு ரூபாய் குறைந்தாலும், எதாவது காரணம் சொல்லி அந்த படத்தை ஓவியா நிராகரித்துவிடுகிறாராம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...