‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்ற படங்களை இயக்கிய பிரியா.வி, எழுதி இயக்கியிருக்கும் இணைய தொடர் ‘ஆனந்தம்’. நடிகர் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் இத்தொடரின் கதை.
ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் தயாரிக்கும் இத்தொடரின் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்த ஜெயராமன், ரீமா ரவிச்சந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர். பிரியா.வி மற்றும் ராகவ் மிர்தாத் வசனம் எழுத, பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.எஸ்.ராம் இசையமைக்க சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.
மொத்தம் 8 பாகங்களை கொண்ட ‘ஆனந்தம்’ இணைய தொடர் ஜீ5 ஒரினலாக வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...