தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடுத்த முதல்வராக சிலரை தேர்வு செய்து வைத்துள்ளனர்.
இந்த சிலரில் சினிமா பிரபங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் முக்கிய இடத்தில் இருக்க, இவர்களுக்கு போட்டியாக விஷாலும் வருவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே தனது அரசியல் ஆசையை வெளிக்காட்டிய விஜய் பிறகு அமைதியானாலும், தற்போதும் சமூக பிரச்சினைகளில் தலையீட்டு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது, மாணவி அனிதா குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறியது, பண இழப்பு மதிப்பு கருத்து வெளிப்படையாக தனது கருத்தை சொன்னது, என்று விஜயின் அதிரடி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும், என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சட்டமா? நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்குவ் அரலாம். என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராக வரலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மெண்ட்டாகவே செய்கிறார். அதையும் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எவன்வே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...