தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடுத்த முதல்வராக சிலரை தேர்வு செய்து வைத்துள்ளனர்.
இந்த சிலரில் சினிமா பிரபங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் முக்கிய இடத்தில் இருக்க, இவர்களுக்கு போட்டியாக விஷாலும் வருவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே தனது அரசியல் ஆசையை வெளிக்காட்டிய விஜய் பிறகு அமைதியானாலும், தற்போதும் சமூக பிரச்சினைகளில் தலையீட்டு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது, மாணவி அனிதா குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறியது, பண இழப்பு மதிப்பு கருத்து வெளிப்படையாக தனது கருத்தை சொன்னது, என்று விஜயின் அதிரடி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும், என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சட்டமா? நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்குவ் அரலாம். என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராக வரலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மெண்ட்டாகவே செய்கிறார். அதையும் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எவன்வே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.” என்று கூறியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...