மாநாடு, மன்மத லீலை என்று அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்காக நாக சைதன்யாவுடன் இணைகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
நாக சைதன்யாவின் 22 வது படமாக உருவாகும் இப்படம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 11 வது படமாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தை, பவன் குமார் வழங்குகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாக சைதன்யா அறிமுகமாகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றிய மற்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...