‘தமிழ் படம் 2, ‘நான் சிரித்தால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்வர்யா மேனன், தெலுங்கு சினிமாவிலும் பிஸியாகியிருக்கிறார்.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன், இளம் நடிகர் நிகில் நடிப்பில், இடி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி தெலுங்கு சினிமாவில் பிஸியாகியுள்ள ஐஸ்வர்யா மேனன், சில தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அது பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...