Latest News :

கெளதம் கார்த்திக், சரத்குமார் இணைந்து நடிக்கும் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படம்!
Sunday May-01 2022

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சரத்குமார், இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கெளதம் கார்த்திக் உடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆதி, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் இளையராஜாவின் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘கிளாப்’. இப்படத்தை பிம் பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த ஐ.பி.கார்த்திகேயன், திரிபுரா கிரியேஷன்ஸ் முரளிகிருஷ்ணா வங்கயாலபதி மற்றும் தாராஸ் சினிகார்ப் வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் ஆகியோருடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

மதுதுரையை கதைக்களமாக கொண்ட ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

 

தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், “கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார். இதுவரை சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்.” என்றார்.

 

இப்படத்தை தொடர்ந்து பிக் பிரிண்ட்ஸ், திரிபுரா கிரியேஷன்ஸ் மற்றும் தாராஸ் சினிமார்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8209

அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையை பெற்ற ‘புஷ்பா 2’!
Saturday June-21 2025

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...

சுவாமிநாதன் ராஜேஷின் இசையமைப்பில் மிகபெரிய பொருட்செலவில் உருவாகும் பிரமாண்ட இசை வீடியோ ‘கண்ணோரமே’!
Saturday June-21 2025

இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...

’லவ் மேரேஜ்’ குடும்பமாக பார்க்க கூடிய படம் - நடிகர் விக்ரம் பிரபு உறுதி
Saturday June-21 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery