’தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதையை வைத்து படம் இயக்க ரெடியான சீனு ராமசாமி, அப்படத்திற்கு ‘மா மனிதன்’ என்று தலைப்பு வைத்தார். ஆனால், அப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், அதற்கிடையே ஒரு பேய் படத்தை இயக்கும் திட்டத்தில் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.
இந்த படத்தில் அதர்வாவை ஹீரோவாக்கியுள்ள சீனு ராமசாமி, ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று தலைப்பு வைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் நடக்கும் திகில் படமான இப்படத்தில் அதர்வா கல்லூரி மாணவர் வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படம் முடிந்த பிறகு விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி ‘மா மனிதன் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதியும் ‘ஜுங்கா’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் பிஸியாகியுள்ளதால், அப்படங்களை முடித்த பிறகே சீனு ராமசாமியின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...