Latest News :

ஓவியாவுடன் இணைய சம்மதம் - ஆரவின் அதிரடி!
Monday October-02 2017

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவை சக போட்டியாளரான நடிகை ஓவிய விரட்டி விரட்டி காதலித்ததை உலகமே அறியும். ஆனால், ஓவியாவை ஆரவ் உதாசினப்படுத்தியதால், மனநிலை பாதிக்கப்பட்டவரை போல பிக் பாஸ் வீட்டில் சுற்றுக்கொண்டிருந்த ஓவியா, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல, அதனால் ஏற்பட்ட சர்சையை தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

போட்டியில் இருந்து ஓவியா வெளியேறினாலும், பிக் பாஸ் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து தற்போது கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஓவியா தன்னை காதலிப்பதை விளையாட்டாகத் தான் நான் ஏற்றுக்கொண்டேன், பிறகு தான் அவர் என்னை சீரியஸாக காதலிப்பதை நான் உணர்ந்தேன், என்று ஆரவ் கூறியுள்ளார்.

 

பிக் பாஸ் டைடிலை வென்ற ஆரவு, அளித்த பேட்டி ஒன்றில், “நான் கடந்த 9 வருடங்களாக தனியாகத்தான் வசித்து வருகிறேன். பிக் பாஸ் வீட்டிலும் அப்படியே தான் வசித்தேன். ஓவியா என்னை காதலிப்பதை நான் விளையாட்டாக நினைத்தேன். பிறகு அவரது காதல் தீவிரத்தை பிரிந்துக்கொண்டு, இது சரிவராது என்று கூறிவிட்டேன். ஆனால், நான் வெற்றி பெற்றதற்கு ஓவியா வாழ்த்தியுள்ளார்.

 

அதே போல், ஓவியாவுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதற்கு நான் ரெடி. ஹீரோவாக நடிப்பதோடு வில்லனாகவும் நடிக்க நான் ரெடி. கதாபாத்திரம் தான் முக்கியம். ஓவியாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் நான் ரெடியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

823

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery