ஜெய் மற்றும் ஜீவா ஆகியோரது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது இருவரும் நடிக்கும் புதுப்படங்களுக்கு ரெகுலராக வாங்கும் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கும் சுந்தர்.சி, ஜெய் மற்றும் ஜீவாவை ஹீரோக்களாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஹீரோயின்களாக நிக்கி கல்ரணி மற்றும் கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
இந்த நிலையில், ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் ஜீவா இந்த படத்தில் ரூ.1.5 கோடி சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறாராம். அதேபோல் ரூ.1.5 கோடி சம்பளம் கேட்கும் ஜெய், ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். நாயகிகளாக கேத்ரின் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கலகலப்பு படத்தில் சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில், கலகலப்பு இரண்டாம் பாகத்திலும் சந்தானத்தை நடிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சுந்தர்.சி, அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாகும் கொடுக்க தயாராக இருக்கிறாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...