Latest News :

சம்பளத்தை குறைத்துக் கொண்ட ஜெய், ஜீவா!
Monday October-02 2017

ஜெய் மற்றும் ஜீவா ஆகியோரது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது இருவரும் நடிக்கும் புதுப்படங்களுக்கு ரெகுலராக வாங்கும் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கும் சுந்தர்.சி, ஜெய் மற்றும் ஜீவாவை ஹீரோக்களாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஹீரோயின்களாக நிக்கி கல்ரணி மற்றும் கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் ஜீவா இந்த படத்தில் ரூ.1.5 கோடி சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறாராம். அதேபோல் ரூ.1.5 கோடி சம்பளம் கேட்கும் ஜெய், ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். நாயகிகளாக கேத்ரின் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 

கலகலப்பு படத்தில் சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில், கலகலப்பு இரண்டாம் பாகத்திலும் சந்தானத்தை நடிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சுந்தர்.சி, அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாகும் கொடுக்க தயாராக இருக்கிறாராம்.

Related News

824

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery