நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.இரஞ்சித், ’பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு’, ’ரைட்டர்’, ’குதிரைவால்’, ’சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ‘சேத்துமான்’, ‘ஜே.பேபி’, ‘பொம்மை நாயகி’, ‘நட்சத்திரம் நகர்கிரது’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி பிற மொழிகளிலும் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் அதற்காக நீலம் ஸ்டுடியோஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் முதல் படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். ‘வேட்டுவம்’ என்று தலைப்பில் உருவாகும் இப்படம் திரைப்படமாக மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடராகவும் உருவாக உள்ளது.
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட உள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட ‘வேட்டுவம்’ படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடரை அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் இதில் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...