தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களை கொண்ட விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
‘குஷி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியை பார்க்கும் போது அவர்களது கெமிஸ்ட்ரி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரசிகர்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.
ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தை நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி ஆகியோர் தயாரிக்கின்றன. ஹிஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, உத்தர் குமார், சந்திரிகா ஆகியோர் கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படம் கலர்புல்லான காதல் படமாக இருப்பதோடு, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் ‘குஷி’ படத்தை வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘லிக்’ (Lik - Love Insurance Kombany) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, ஆவடியில் உள்ள வேல்டெக் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், விஜய் சேதுபதி நடிப்பில், பி...
பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின், சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது...