லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாலம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்தியது.
ஹீரோயின், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் வித்தியாசமான மேக்கிங் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இப்படம் தமிழ் சினிமா எதிர்ப்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது.
தற்போது ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய மொழியில் பிரம்மாண்டமாக ‘கைதி’ வெளியாக உள்ளது. ‘உஸ்னிக்’ என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல் முறை.
‘உஸ்னிக்’ படத்தை ரஷ்யாவில் வெளியிடும் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம், படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு வித்தியாசமான பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...