இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 41 வது திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், படம் தொடர்பாக பல வதந்திகள் வெளியானது. ஆனால், அதை மறுத்த சூர்யா தரப்பு, விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் பாலா - சூர்யா கூட்டணி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயராகி வருகின்றனர். அதனை அறிவிக்கும் வகையில் இயக்குநர் பாலா மற்றும் சூர்யா இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, படம் தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் புதுமுகம் மமிதா நடிக்கிறார்.
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மாயப்பாண்டி கலை இயக்குநராக பணியாற்ற, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...