’மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருவதோடு வித்தியாசமான ஜானர்கள் படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு, தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் பரத், வாணி போஜன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.சக்திவேல் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிரள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லும் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் தலைப்பை போலவே படு மிரட்டளாக உள்ளது.
ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத த்ரில்லர் அனுபவத்தை வழங்கும், இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கதை, வசனம் எழுதி எம்.சக்திவேல் இயக்கும் இப்படத்திற்கு பிரசாத் எஸ்.என் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன்.ஆர் படத்தொகுப்பு செய்ய, கணிகண்டன் சீனிவாசன் கலையை நிர்மாணித்துள்ளார். டேஞ்சர் மணி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சச்சின் சுதாகரன் - ஹரிஹரன்.எம் ஒலியை வடிவமைத்துள்ளனர்.
தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் உருவாகும் வித்தியாசமான த்ரில்லர் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...