Latest News :

பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேற்கும் மனைவி!
Monday October-02 2017

காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழும் நிலையில், பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக அவரது மனைவி நித்யா, போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, நித்யாவுக்கு சினிமா ஜிம் பயிற்சியாளர் ஒருவருடனும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்களைக் கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் போலீஸில் புகார் அளித்த தாடி பாலாஜி, தான் மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கூறினார்.

 

இந்த நிலையில், தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவரது மனைவி நித்யா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இது குறித்து கூறிய நித்யா, “பாலாஜியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் கூறி இருப்பது போல யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

 

சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்களோடு என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சினை. பாலாஜி கூறியது போல இவர்களோடு நான் பழகவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

 

எனது குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது. அவளை நானே நல்லபடியாக வளர்த்துக் கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

829

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery