Latest News :

’காபி வித் காதல்’ மூலம் மீண்டும் மேஜிக் நிகழ்த்த வரும் சுந்தர்.சி
Monday June-06 2022

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி, காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 

 

பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களையும் தியேட்டருக்கு வரவைக்கும் மேஜிக்கை தனது ஒவ்வொரு படத்திலும் செய்துக் காட்டும் இயக்குநர் சுந்தர்.சி, முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்க கூடிய படத்தை கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில் ’அரண்மனை-3’ படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’காபி வித் காதல்’. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன்

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, காதல், காமெடி, பாடல்கள் என அப்படத்தில் அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் பேவரைட்டாக இப்போதும் இருக்கிறது.

 

அந்த வகையில், ’காபி வித் காதல்’ படமும் சென்னையில் துவங்கி ஊட்டில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 8 பாடல்களும் மெஹா ஹிட் ரகங்களாக வந்துள்ளதாம். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார்.

 

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவர். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி தனது பாணியில் கலகலப்பாக சொல்லியிருகிறார்.

 

மொத்தம் 75 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8294

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery