Latest News :

’காபி வித் காதல்’ மூலம் மீண்டும் மேஜிக் நிகழ்த்த வரும் சுந்தர்.சி
Monday June-06 2022

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி, காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 

 

பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களையும் தியேட்டருக்கு வரவைக்கும் மேஜிக்கை தனது ஒவ்வொரு படத்திலும் செய்துக் காட்டும் இயக்குநர் சுந்தர்.சி, முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்க கூடிய படத்தை கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில் ’அரண்மனை-3’ படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’காபி வித் காதல்’. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன்

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, காதல், காமெடி, பாடல்கள் என அப்படத்தில் அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் பேவரைட்டாக இப்போதும் இருக்கிறது.

 

அந்த வகையில், ’காபி வித் காதல்’ படமும் சென்னையில் துவங்கி ஊட்டில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 8 பாடல்களும் மெஹா ஹிட் ரகங்களாக வந்துள்ளதாம். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார்.

 

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவர். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி தனது பாணியில் கலகலப்பாக சொல்லியிருகிறார்.

 

மொத்தம் 75 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8294

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery