தமிழ் சினிமாவின் லேடு சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி படு விமர்சையாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி, இல்லர வாழ்க்கையில் நுழைவது குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுடைய திருமணம் தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 200 பேரை மட்டும் அழைத்து திருப்பதியில் திருமணத்தை நடத்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திட்டமிட்டனர். ஆனால், 200 பேர் கலந்துக்கொள்ள திருப்பதியில் அனுமதி இல்லை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்தினார்கள்.
ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.
திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். அங்கிருந்து சென்னை புறப்பட்டவர்கள், மறுநாள் ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களது சினிமா பயணத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, ”இதுவரை என சினிமா பயணத்தில் ஒத்துழைப்பு கொடுத்து என் வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகித்திருக்கிறீர்கள். உங்கள் ஆசியுடன் இல்லவர வாழ்வில் இணைகிறேன், உங்களை ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும், நன்றி” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “நான் நயன்தாராவை முதன் முதலில் சந்தித்து கதை சொன்ன இடம் இது தான். அதனால் தான், நயன்தாராவும், நானும் உங்களை இந்த இடத்தில் சந்தித்திருக்கிறோம். இந்த இடமும், நீங்களும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் நன்றி.” என்றார்.
அதாவது, சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தனிப்பட்ட முறையில் சந்தித்து ‘நானும் ரவுடி தான்’ கதையை சொன்னாராம். அப்படத்தின் போது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, வளர்ந்து தற்போத் தம்பதிகளாகியிருப்பதால், அதே இடத்தில் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...