Latest News :

நயன்தாராவை முதன் முதலில் இந்த இடத்தில் தான் சந்தித்தேன்! - விக்னேஷ் சிவன் கூறிய சுவாரஸ்ய தகவல்
Sunday June-12 2022

தமிழ் சினிமாவின் லேடு சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி படு விமர்சையாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி, இல்லர வாழ்க்கையில் நுழைவது குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுடைய திருமணம் தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

 

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 200 பேரை மட்டும் அழைத்து திருப்பதியில் திருமணத்தை நடத்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திட்டமிட்டனர். ஆனால், 200 பேர் கலந்துக்கொள்ள திருப்பதியில் அனுமதி இல்லை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்தினார்கள்.

 

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.

 

திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். அங்கிருந்து சென்னை புறப்பட்டவர்கள், மறுநாள் ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களது சினிமா பயணத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, ”இதுவரை என சினிமா பயணத்தில் ஒத்துழைப்பு கொடுத்து என் வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகித்திருக்கிறீர்கள். உங்கள் ஆசியுடன் இல்லவர வாழ்வில் இணைகிறேன், உங்களை ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும், நன்றி” என்றார்.

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “நான் நயன்தாராவை முதன் முதலில் சந்தித்து கதை சொன்ன இடம் இது தான். அதனால் தான், நயன்தாராவும், நானும் உங்களை இந்த இடத்தில் சந்தித்திருக்கிறோம். இந்த இடமும், நீங்களும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் நன்றி.” என்றார்.

 

அதாவது, சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தனிப்பட்ட முறையில் சந்தித்து ‘நானும் ரவுடி தான்’ கதையை சொன்னாராம். அப்படத்தின் போது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, வளர்ந்து தற்போத் தம்பதிகளாகியிருப்பதால், அதே இடத்தில் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.

Related News

8307

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

47:58 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு உலக சாதனை படைத்த சீகர் பிக்சர்ஸின் ‘டெவிலன்’!
Sunday June-22 2025

தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...

அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையை பெற்ற ‘புஷ்பா 2’!
Saturday June-21 2025

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...

Recent Gallery