Latest News :

பெண்கள் விஷயத்தில் அஜித்! - வாயால் வம்பில் சிக்கிய நயந்தாரா!
Monday October-02 2017

நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் டிவி சேனல், பத்திரிகை உள்ளிட்ட எந்த ஊடகமாக இருந்தாலும், சினிமாவில் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்க தவறுவதில்லை. நடிகைகளும் எந்த வித பயமோ இன்றி, தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

 

அப்படி எந்த சர்ச்சியையும் நயந்தாரா ஏற்படுத்த வில்லை என்றாலும், பெண்கள் விஷயத்தில் அஜித் எப்படிபட்டவர்? என்பதை சொல்லி வம்பில் சிக்கியிருக்கிறார்.

 

தனது அறம் படத்தின் புரோமோஷனுக்காக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வரும் நயந்தாரா, சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசும் போது, “அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரும் சரி ரஜினி சாரும் சரி, பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். நம் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள். அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது.” என்று கூறினார்.

 

நயந்தாராவின் இந்த அஜித் துதியால், விஜய் ரசிகர்கள் அவர் மீது ரொம்ப கடுப்பாகியிருக்கிறார்கள். காரணம் நயந்தாரா விஜயுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.

 

இதனால், நயந்தாராவின் அறம் படம் மட்டும் அல்ல, அவர் நடிப்பில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் தவிர்ப்போம் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சபதம் ஏற்று வருகிறார்கள்.

 

ஏற்கனவே தான் தயாரித்த அறம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வரும் நயந்தாரா, எப்போதும் போல வாயை பேச பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

Related News

831

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery