நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் டிவி சேனல், பத்திரிகை உள்ளிட்ட எந்த ஊடகமாக இருந்தாலும், சினிமாவில் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்க தவறுவதில்லை. நடிகைகளும் எந்த வித பயமோ இன்றி, தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அப்படி எந்த சர்ச்சியையும் நயந்தாரா ஏற்படுத்த வில்லை என்றாலும், பெண்கள் விஷயத்தில் அஜித் எப்படிபட்டவர்? என்பதை சொல்லி வம்பில் சிக்கியிருக்கிறார்.
தனது அறம் படத்தின் புரோமோஷனுக்காக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வரும் நயந்தாரா, சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசும் போது, “அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரும் சரி ரஜினி சாரும் சரி, பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். நம் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள். அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது.” என்று கூறினார்.
நயந்தாராவின் இந்த அஜித் துதியால், விஜய் ரசிகர்கள் அவர் மீது ரொம்ப கடுப்பாகியிருக்கிறார்கள். காரணம் நயந்தாரா விஜயுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.
இதனால், நயந்தாராவின் அறம் படம் மட்டும் அல்ல, அவர் நடிப்பில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் தவிர்ப்போம் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சபதம் ஏற்று வருகிறார்கள்.
ஏற்கனவே தான் தயாரித்த அறம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வரும் நயந்தாரா, எப்போதும் போல வாயை பேச பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...