இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் இன்று தனது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
1985 ஆம் ஆண்டு பிரபு, ரேவதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கண்ணிராசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.பாண்டியராஜன், தனது 24 வயதில் படம் இயக்கியதால், மிக குறைந்த வயதில் திரைப்படம் இயக்கியவர் என்ற சாதனையை புரிந்தார். அதே ஆண்டில் தான் இயக்கிய தனது இரண்டாவது படமான ‘ஆண் பாவம்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தான் இயக்கிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்த பாண்டியராஜன், ‘டபுள்ஸ்’ படம் மூலம் பிரபுதேவாவை இயக்கியவர், மீண்டும் ‘கபடி கபடி’ படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். 2006 ஆம் ஆண்டில் வெளியான ‘கைவந்த கலை’ என்ற படத்தோடு இயக்குநர் பாண்டியராஜுக்கு ஓய்வு கொடுத்தவர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
திரைப்படங்கள் இயக்க வில்லை என்றாலும் டாக்குமெண்டரி படம் ஒன்றில் மூலம் சரவதேச திரைப்பட விழா விருது வென்றவர் விரைவில் திரைப்படம் இயக்கும் திட்டத்திலும் இருக்கிறார்.
இன்று (அக்.02) தனது 58 வது பிறந்தநாளை தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு தனது இல்லத்தில் பாண்டியராஜன் சிறப்பாக கொண்டாடினார்.
அவருக்கு நடிகர்கள் விமல், ரோபோ சங்கர், சாந்தனு பாக்யராஜ், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், இசயமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது பிரந்தநாளையொட்டி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு, பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...