லட்சுமி , பானுமதி, ரேவதி, சுகாஷினி, லட்சுமி ராமகிருஷ்னா ஆகிய பெண் இயக்குநர்கள் வரிசையில் நடன இயக்குநர் சுவர்ணாவும் இணைகிறார். 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சுவர்ணா, ‘நாதிரு தின்னா’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.
சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி, தருண் மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முரளீதர் ராகி சையமைக்க, வின்செண்ட் ஜெயராஜ், விஜயகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடனம் அமைத்து இயக்கியிருக்கும் சுவர்ணா எஸ்.எஸ் ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...