Latest News :

பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் மூடப்படுகிறது!
Tuesday October-03 2017

சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கங்கள் இன்று முதல் மூடப்படுகிறது.

 

தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இந்த வரி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

 

ஏற்கனவே ஜி.எஸ்.டி 28 சதவீத வரி கட்டும் திரைத்துறையின், இந்த கூடுதல் கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம் சென்னையில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இன்று முதல் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம், மற்ற திரையரங்குகளில் திரைபப்டங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

833

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery