சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கங்கள் இன்று முதல் மூடப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இந்த வரி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி 28 சதவீத வரி கட்டும் திரைத்துறையின், இந்த கூடுதல் கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இன்று முதல் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம், மற்ற திரையரங்குகளில் திரைபப்டங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...