சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கங்கள் இன்று முதல் மூடப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இந்த வரி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி 28 சதவீத வரி கட்டும் திரைத்துறையின், இந்த கூடுதல் கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இன்று முதல் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம், மற்ற திரையரங்குகளில் திரைபப்டங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...