’வீட்ல விசேஷம்’ திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் ஆர்ஜே பாலாஜி, தனது ரசிகர்கள் உற்சாகமடையும் ஒரு தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கும் பிடித்துவிட்டதால் விரைவில் விஜய் பட இயக்குநராக அவர் உருவெடுக்க இருக்கிறார்.
‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ என்று தொடர்ந்து மூன்று வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி, அப்படங்களில் இயக்குநராகவும் கதையாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆர்ஜே பாலாஜி நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொன்னாராம். ஆர்ஜே பாலாஜியிடம் இருந்து மூக்குத்தி அம்மன் போன்ற ஒரு குடும்ப காமெடி கதையை எதிர்ப்பார்த்த விஜய், பாலாஜியின் கதையை கேட்டு வியந்து விட்டாராம். காரணம், ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘கே.ஜி.எப்’ போன்ற ஒரு மிகப்பெரிய ஃபான் இந்தியா படத்திற்கான கதையை பாலாஜி சொன்னாராம்.
அத்துடன், ‘கே.ஜி.எப்’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அப்படி ஒரு கதையை பாலாஜி சொல்லியதால் அசந்து போன விஜய், அந்த கதையை முழுமையாக தயார் செய்யுமாறு பாலாஜியிடம் தெரிவித்துளாராம்.
அந்த கதையை முழுமையாக தயார் செய்ய சுமார் ஒரு வருடம் ஆகும் என்று விஜயிடம் ஆர்ஜே பாலாஜி சொல்ல, நீங்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து கதை சொல்லுங்கள், என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
ஆக, விரைவில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவது உறுதியாகிவிட்டது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...