ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஹரி, அதே பாணியில் அதே சமயம், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வித்தியாசமான சில முயற்சிகளை கையாண்டு ‘யானை’ படத்தை இயக்கியுள்ளார்.
அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கே.ஜி.எப் வில்லன் ராஜேந்திரன் ராஜு, யோகி பாபு, ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அருண் விஜயும், இயக்குநர் ஹரி முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்க , இணை தயாரிப்பை சந்தியா கிஷோர்குமார் கவனித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘யானை’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்...
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் ( Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே நிறைவு பெற்றிருக்கிறது...
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'...