ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஹரி, அதே பாணியில் அதே சமயம், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வித்தியாசமான சில முயற்சிகளை கையாண்டு ‘யானை’ படத்தை இயக்கியுள்ளார்.
அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கே.ஜி.எப் வில்லன் ராஜேந்திரன் ராஜு, யோகி பாபு, ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அருண் விஜயும், இயக்குநர் ஹரி முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்க , இணை தயாரிப்பை சந்தியா கிஷோர்குமார் கவனித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘யானை’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...