மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ விரைவில் தமிழ் சினிமாவுக்குள் தயாரிப்பாளராக நுழைவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அரசியல் தலைவர்களோ அல்லது அவர்களது வாரிசுகளோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே தங்களது பங்களிப்பை அளித்து வருவதோடு, தங்களது பணத்தை முதலீடும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இதுவரை திரைப்படம் பார்ப்பதில் மட்டுமே சினிமாவுக்கும் தனக்குமான தொடர்பை வைத்திருந்த வைகோ, இனி தன்னையும் ஒரு சினிமாக்காரராக வெளிக்காட்டிக்கொள்ளப் போகிறார். விரைவில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ள வைகோ, அதன் மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதிமுகம் என்ற தொலைக்காட்சியை வைகோ நடத்தி வருகிறார். அந்த தொலைக்காட்சிக்காக திரைப்படங்களின் வீடியோ மற்றும் பாடல் காட்சிகளை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அவற்றில் முதலீடு செய்யும் பணத்தை வைத்து சொந்தமாக படம் தயாரித்தால், அந்த திரைப்படங்களை தமது தொலைக்காட்சிக்கு பயன்படுத்திக் கொள்வதோடு, திரைப்படங்களை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பலாம், என்று வைகோவிடம் சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாகவே இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த வைகோ இறுதியாக திரைப்படங்கள் தயாரிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரம்.
தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்களை விரைவில் அவர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...